பார்முலா ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 



தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர். 

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...