தூத்துக்குடி கலவரம்: நீலகிரி பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார் ஆளுநர்

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...