ஜூலை 20 முதல் தமிழகத்தில் 15 லட்சம் லாரிகள் இயங்காது

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் இணை செயலாளர் கே.எஸ். கலியபெருமாள் கூறுகையில், "நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை சுங்க வரி கட்டணமும் உயர்கிறது. காப்பீடு நிறுவனங்களும் விலைகளை உயர்த்தியுள்ளன. இது போன்று அனைத்து வகை கட்டணங்களும் உயர்ந்துள்ளதால், லாரிகளை இயக்க முடியாமல் சுமார் 25 சதவீதம் பேர் இந்த தொழிலை விட்டே சென்று விட்டனர்.

லாரிகள் சீராக இயங்கி இந்தியா முழுவதும் பொருட்களை கொண்டு போய் சேர்த்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீராக இருக்கும். லாரி வாடகை உயர்த்தினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும். அண்டை மாநிலமான கார்நாடகவில் டீசலுக்கான உள்ளூர் வரி ரூ. 3.50 குறைக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகத்திலும் இது குறைக்கப்பட வேண்டும்.

ஜூலை 20-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். சுமுகமான தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும், இல்லை என்றால் போராட்டம் தொடரும்." என்றார்.

கோவையில்

கோவையில் மட்டுமே சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகங்களுக்கு இயக்கப்படுக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் லாரி தொழிலை நம்பியுள்ள ஓட்டுனர்கள், கிளினர்கள், கூலி தொழிலாளிகள் வேலை இன்றி பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து லாரி ஒட்டுனர் மாரிமுத்து கூறுகையில், "லாரி ஒட்டுவதில் ஏற்கனவே மாதம் 15 நாட்கள் தான் வேலை உள்ளது. விலை வாசி உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம். அது மட்டுமல்ல வேலை நிறுத்தம் தொடங்கினால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்." என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "மக்களை பாதிக்கும் முன் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரும்பாலான பொருட்களில் விலை வாசி உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்." என்றார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...