முடங்கியது தொழில்நகரமான திருப்பூர் : ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதோடு, அங்குள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரின்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. அதேபோல, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

மாவட்டம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூரில் நூறு சதவீத கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் 80 சதவீதம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...