தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை ஆரம்பம்

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையின் முக்கிய சுற்றுலாப்பகுதியான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.



இதேபோல, இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலா வந்தவர்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர். மழைக் காரணமாக அவர்கள் குடில்களின் கீழேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 42 மி.மீ., கூடலூர் பகுதியில் 41 மி.மீ, கின்னக்கொரை பகுதியில் 20 மி.மீ., மற்றும் உதகையில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 232 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...