குளத்தை காணோம்...! : வடிவேலு பட பாணியில் திருப்பூரில் புகார்

திருப்பூர்: மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது. 

அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர். 

குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...