சட்டமன்றத்திற்கு பயந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது - டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

 

சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிரச்சினையை எதிர் கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று சீல் வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். 

கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை உட்பட 50 அ.ம.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது. காவல் துறையினர் மனசாட்சி இல்லாமல் செயல்படுகின்றனர். தவறு செய்த அ.தி.மு.க.,வினர் சிறைக்குச் செல்வார்கள். தூத்துக்குடியில் போராடியவர்கள் தீவிரவாதிகள் என்று சொன்னால், இறந்தவர்களுக்கு எதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுகின்றது? தூத்துக்குடி பிரச்சினையில் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் ஒடுக்கப்படுகின்றது. 

நடிகை ஸ்ரீ தேவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் ஏன் அமைதியாக இருக்கின்றார்? தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் போது ஊடகங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர்களை திட்டுவார்கள் என்பதாலேயே ஊடகங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை.

தூத்துக்குடி இன்னும் அமைதியான நிலைக்கு வரவில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றுகின்றது. கோவை போலீசாரால் காக்கிச்சட்டையின் மரியாதை போய்விட்டது. டி.டி.வி., தினகரனின் ஆதரவாளர்களை காவல் துறையின் மூலம் ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைக்கின்றனர். அது நடக்காது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...