காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

புதுடில்லி: கர்நாடகா - தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி, காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுவதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காகவும் தேவைப்பட்டால் இருமாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது மோதல் என தகவல் வந்தால், அமைதியை ஏற்படுத்த உண்ணா விரதம் இருப்பேன் என்றார். மேலும், இரு மாநிலங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இதனை இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்காக மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...