பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த அதிரடி தாக்குதல்... ஆதாரங்களை அளித்தது ராணுவம்!

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான விடியோ ஆதாரங்களை மத்திய அரசிடம் இந்திய ராணுவம் அளித்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசிடம் விடியோ ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, டெல்லியில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், புதன்கிழமை கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ அல்லது பிரதமரோ விளக்கம் அளிக்கவில்லை. அது தொடர்பாக, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்தான், ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகள், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன," என்றார் அவர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...