தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவன்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசிய படை மாணவன் ஆஷிக் டெல்லியில் நடைபெற்ற .22 துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தான். தேசிய படை மாணவர்களுக்காக 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனியில் சார்பாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி நடைபெற்றது.

இதில் கோவையில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தேசிய படை மாணவன் ஆஷிக் தேர்வு பெற்றான். பின்னர், கந்தசாமி கவுடர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் .22 துப்பாக்கி சுடுதல் பிரிவில் குரூப்பிங் தேர்வில் முதலிடம்  பிடித்தார்.



தொடர்ச்சியாக, சேலம், நாகர்கோயில், தூத்துக்குடி, மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று மதுரையில் நடைபெற்ற  கலந்து கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் சார்பாக தேசியபடை மாணவர்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்பு, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான .22 துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இம்மாணவனை பள்ளியின் தாளாளர்  ஜி.கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, பள்ளி தலைமையாசிரியர் மனோரமா மற்றும் தேசிய மாணவர்படை ஆசிரியர் குமரன் ஆகியோர் பாராட்டினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...