கோவையில் இளம் ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளை ரயில் நிலையம் அருகே கான்போரை முகம்சுளிக்க வைத்தது.



கோவை ரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளையில் ஈடுபட்ட காட்சி காண்போரை முகம்சுளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பல்வேறு கட்சிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில், தினத்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் மதுபோதைக்கு நாளுக்கு நாள் அடிமையாகிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை இரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று ஆண், பெண் என்ற பேதமின்றி மதுபோதையில் தள்ளாடியபடி நடத்து சென்று அப்பகுதியில் செல்வோரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் வாகனஒட்டிகளிடம் அநாகரிகமாக நடத்துக்கொண்டதும் மது மயக்கத்தில் அந்த இளம்பெண் சாலை ஒர சுவற்றில் மோதி, சரிந்துவிழும் காட்சிகளும் காண்போரை முகம்சுளிக்க வைத்தது. இதையடுத்து அங்குதிரண்ட கூட்டத்தில் ஒரு சிலர் அப்பெண்ணை தூக்க முற்பட்டதால் ஆத்திரம் அடைந்தஅவருடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தநிலையில் அவ்விருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். கோவை மாநகரின் முக்கிய இடமான ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...