காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்- வித்யாசாகர் ராவ்

தஞ்சை: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மால் இயன்றதை செய்வேன் என்று தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்துள்ளார். மும்பையிலுள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, தமிழ் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அர்பணித்ததற்காக, தஞ்சையில் தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு சென்னை தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...