மாணவர்களின் திறமையை வளர்க்க பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ் போட்டி


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவாக பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ்- 2016 போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான திறமைகள், கண்டுபிடிப்புகளை வளர்க்கும் விதத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகளின் விபரம் வருமாறு:-

1) அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி, 2) வினாடி- வினா, 3) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்பான சொற்பொழிவுகள், 4) ஓவியப் போட்டிகள், 5) சைஃபி- அறிவியல் புனைக்கதைகள் ஆகியவை ஆகும்.

இப்போட்டிகளில், அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், வான்வெளி போக்குவரத்து மற்றும் அறிவியல் குறித்தும் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இந்நிகழ்வில், மாணவர்கள் உருவாக்கிய விமான மாதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், 100 அடி உயரத்தில் சுமார் 20 நொடிகள் பறக்கக் கூடிய விமான மாதிரியும் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ரோபோ விளையாட்டுகளும், கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அப்துல் கலாமின் நினைவாக வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், பங்குபெரும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. பார்க்குழுமத்தால் நடத்தப்படும் இன்னோஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளது என பார்க் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 99655 11155 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...