கத்தியைக் காட்டி செல்போன் திருட்டு - ஒருவர் கைது

பீளமேடு பகுதியில் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி செல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...