ஒரே பகுதியில் பெண்களிடம் 13 சவரன் கொள்ளை

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). நேற்றுமுன்தினம் சூலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், உறவினர்களுடன் எஸ்.எல்.பி.நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு ராஜம்மாள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி ஆனந்தவள்ளி (35) செவ்வாயன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ஆனந்தவள்ளியின் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனை தடுக்க முயற்றித்த ஆனந்தவள்ளி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வாகன எண்ணை மட்டும் ஆனந்தவள்ளி கவணித்துள்ளார். அந்த எண் TN 36 D 2333 ஆகும். இந்த வாகன எண்ணை ஆதாரமாகக் கொண்டு சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...