ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் ''திரைக்கு வராத கதை''க்கு தடை கோரி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உஷேன். ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தினை தடைசெய்யக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து ஜாகிர் உஷேன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

''கடந்த 28ம் தேதியன்று திரைக்கு வந்த படம் ''திரைக்கு வராத கதை''. துளசி ராஜ் இயக்கத்தில் கே.மணிகண்டன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இனியா, நதியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்கள் ஓரினசேர்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற படங்களை வெளியிட்டால் சமூக பிரச்சனைகளான கள்ளத் தொடர்பு, விவாகரத்து உள்ளிட்டவை அதிகரிக்கும். சமீபகாலமாக பெண் குழந்தைகள் அதிகப்படியாக பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகியுள்ளது பெண்களின் மீதான சமூகச் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும். இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கையைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்'' என கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...