சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழா


கோவையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் திங்களன்று (இன்று) சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழாவும், லஞ்ச ஒழிப்பு வார விழாவும் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய ஜவுளித் துறை நிர்வாக இயக்குநர் அருள்சாமி கலந்து கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்ற மாணவர்களிடையே அருள்சாமி பேசுகையில் ''தேசம், நாடு, மக்கள் என்று வரும் போது நலத்துடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இந்த நாட்டில் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றினை முறையாக பயன்படுத்தி சமுதாக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் விளங்க ஒவ்வொருவரும் பங்களிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்று கூறினார்.



மேலும், இவ்விழாவில் பங்குபேற்ற அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...