பணத்தை திருட முயன்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (52). புதனன்று கோவைக்கு வந்துள்ளார். அப்போது உணவு உண்பதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். 

இதனிடையே, இவரது காரில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை மர்மநபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அர்ஜூனன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...