லஞ்ச ஒழிப்பு வாரம் அவினாசிலிங்கம் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


இந்திய அரசாங்கத்தின் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கனரா வங்கி ஆண்டுதோறும் 31-5-2016 முதல் 5-11-2016 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது. இன்று கனரா வங்கி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2000 மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பேரணி நிறைவு பெற்றவுடன் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக கலையரங்கில் கோவை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.



பின்னர் பேசிய கனரா வங்கி துணை பொதுமேலாளர் பரமசிவம் விழிப்புணர்வு வாரம் பற்றிய அனுசரிப்பு பற்றி அவர் பேசுகையில்; இந்திய முழுவதும் இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது. நாடு முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு முற்றிலும் தடை செய்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வருங்காலத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக இந்தப்பேரணி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கல்லூரிகள் மற்றும் 17 பள்ளிகளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு கூறப்படும் என கூறினார். 



இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார், துணை வேந்தர் பிரேமவதி விஜயன், பல்கலைக்கழக பதிவாளர் வெண்மதி, கனரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...