லஞ்ச ஒழிப்பு வாரம் அவினாசிலிங்கம் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


இந்திய அரசாங்கத்தின் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கனரா வங்கி ஆண்டுதோறும் 31-5-2016 முதல் 5-11-2016 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது. இன்று கனரா வங்கி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2000 மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பேரணி நிறைவு பெற்றவுடன் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக கலையரங்கில் கோவை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.



பின்னர் பேசிய கனரா வங்கி துணை பொதுமேலாளர் பரமசிவம் விழிப்புணர்வு வாரம் பற்றிய அனுசரிப்பு பற்றி அவர் பேசுகையில்; இந்திய முழுவதும் இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது. நாடு முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு முற்றிலும் தடை செய்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வருங்காலத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக இந்தப்பேரணி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கல்லூரிகள் மற்றும் 17 பள்ளிகளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு கூறப்படும் என கூறினார். 



இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார், துணை வேந்தர் பிரேமவதி விஜயன், பல்கலைக்கழக பதிவாளர் வெண்மதி, கனரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...