பெட்ரோல் பங்க் நேரம் குறைப்பு!


நவம்பர் 5ம் தேதியன்று (வெள்ளி) முதல், பெட்ரோல் பங்குகளின் நேரம் குறைக்கப்படும் எனவும், வார விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, டீலர் கமிஷனை உயர்த்தி வழங்குமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை செய்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி, கடந்த மாதம் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பங்குகள் மூடப்பட்டன. 

இந்நிலையில், தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''டீலர் கமிஷன் தொடர்பாக, எண்ணைய் நிறுவனங்களிடம் மும்பையில் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், நாளை (நவ.5ம் தேதி) முதல் பெட்ரோல் பங்க்கில் விற்பனை நேரம் குறைக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க் இயங்கும். அதன் பின் வங்கிகள் போல் வாரவிடுமுறையும் விடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...