எஸ்என்ஆர் கல்லூரியில் சென்னையின் எஃப்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பைவலைவ் அறிமுகம் எஸ்என்ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்பந்து விளையாட்டு சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மற்றும் சென்னை ஆன்லீஷ் விளையாட்டு எல்எல்பி நிறுவனம் இணைந்து 8,000 சதுர அடி இடத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் ஒரு கோடி செலவில் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் இந்த புல்தரை கால்பந்து வசதி "பைவலைவ்" முத்திரையுடன் சர்வதேச தரத்தில் பிப்ரவரி 2017ல் அமைய உள்ளது. வழக்கமான போட்டிகள் முகாம்கள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



பின்னர் நிகழ்ச்சியில், சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கால்பந்து வீரர்களான ஜெஜெ  (இந்தியாவின் சிறந்த வீரர்) காங்கெபாம் தொய் சிங் (தற்காலிக பெங்களூரு எஃப்சி வீரர் - சென்னையின் எஃப்சி வீரர் இந்திய சூப்பர் லீக் மிட்ஃபீல்டராக இருக்கும் கால்பந்து வீரர்) ஈடர் மோன்டெய்ரா பெர்னாண்டஸ், ஏதேர் என அழைக்கப்படும், சென்னையின் எஃப்சி வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர்) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர், தலைமை வர்த்தக அதிகாரி ஸ்வாதி ரோஹித், முதன்மை செயல் அதிகாரி சி வி ராம்குமார், எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கோவை கால்பந்து கழக செயலாளர் ராஜா, நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...