ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.


கோவையில் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவார பகுதியில் உள்ள ஈஷா வித்யா குருகுல உறைவிட பள்ளி முறையான அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்படும் தேசிய கல்வி மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா வித்யா பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஜீன் மாதம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்த சென்ற போது பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாவும், பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு துறை நிறுவனமான குழந்தைகள் நல ஆணையத்தையே ஆய்வு செய்ய விடாமல் தடுத்திட்ட ஈஷா பள்ளி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டுமெனவும், இது சட்டத்தை மதிக்காத ஈஷா நிர்வாகத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகாரமோ, பள்ளி நடத்த அனுமதி பெறாத பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவும், இதர கல்வி நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளி நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் பிரகாச்ஜ் ஜவடேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பி.ஆர்.நடராசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...