தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? - ஜி.கே.வாசன்


தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,



''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் மற்றும் மானாவரி நிலத்திற்கு சேத அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. கச்சத்தீவை கைப்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேப்போல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளை காவல்துறையினர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ?. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...