குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை- கல்வி பாதிப்பதாக பள்ளி மாணவிகள் மனு

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தி அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் கல்வி பாதிப்பதாகவும், மேலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லி மிரட்டி வருவதாகவும் பள்ளி மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சுகுணா பெப்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் தன்யா, ஜிடி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிவேதா ஆகிய பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிறுப்பதாவது:-

''ஏ.செல்வி, தன்யா, நிவேதா ஆகிய நாங்கள் உப்பிலிபாளையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹரி ராம் வீதியில் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது இந்த வருட படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் எங்களுடைய வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியப்பன் என்பவர் அவருடைய நிலத்தை அரசன் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் அரசகுமாரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைக்கு விட்டார்.

மேற்படி தொழிற்சாலை வந்த பிறகு எங்களது நிம்மதி முற்றிலும் தொலைந்து விட்டது. கால நேரம் இல்லாமல் இரவு நேரங்களிலும் மேற்படி நபர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிற்சாலையில் இருந்து 110 டெசிபலுக்கும் மேலாக ஒலி ஏற்பட்டு எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், இரவு நேரங்களில் உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனது தந்தை பாலசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதால் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணியளவில் தான் வீடு திரும்புவார். வேறு ஆண்கள் யாரும் எங்களது குடும்பத்தில் இல்லாததால் நாங்கள் மேற்படி நபர்களை அணுகி இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களும், அவர்களது உறவினர்களும் எங்களது வீட்டினை காலி செய்துவிடுமாறு மிரட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உனடடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மேற்படி நிறுவனங்களை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...