திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் 40 தா.ம.க நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


கோவை தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தா.ம.க நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் இன்று மாலை திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடந்த சிறிய விழாவில் அவர் கலந்து கொண்டார்.தா.ம.கவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 40 பேர் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.அவர்களை ஸ்டாலின்  கைகுலுக்கி வரவேற்றார். நாளை காலை திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் பின்னர் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கியை திறந்து வைக்கின்றார்.பின்னர் கோவையை அடுத்த காரமடை பகுதியில் புறநகர் மாவட்ட திமுக ஏற்பாடு செய்துள்ள விழாவில் ஸ்டாலின் பங்கேற்கின்றார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையவுள்ளனர்.

Newsletter

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...