77-வது வார்டில் கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளையும், சொக்கம்புதூர் மின் மயானத்தில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மருத்துவமனையும், அங்குள்ள வரி செலுத்தும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி 77, 79 ஆகிய வார்டுக்குட்பட்ட பொன்னையராஜபுரத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக பயோமெட்ரிக் பயன்படுத்தும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் விதமாக 86-வது வார்டு, செல்வபுரம் நகர்நல மருத்துவ மையத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அனைத்து வரி செலுத்தும் இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்திலுள்ள வரி செலுத்தும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...