மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்களில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான முதல் சுற்று விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (இன்று) துவங்கியது.



இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...