மாணவர்கள் உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைபுரிய வேண்டும் ஆட்சித்தலைவர் அறிவுரை!

கோயம்புத்தூர் பி.எஸ.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் பொதுத்தேர்வு  எழுதவுள்ள மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி முகாம் இன்று (19.11.2016) தமிழ்நாடு கதர்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சந்தோஷ்பாபு முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், வழிகாட்டி புத்தகங்களையும் வழங்கினார்.



பின்னர் பேசிய அவர்; 
தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இதன்மூலம், தமிழகத்தில் கல்விப்புரட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவி மாணவியர்களின் கல்வியை மேம்படுத்தி உயர்நத சிகரங்களை அடைகின்ற உதவுகின்ற நிகழ்ச்சிதான் இந்த சிகரம் தொடு நிகழ்ச்சி. தேர்வை கொண்டு மாணவர்களுக்குள்ள பய உணர்வை நீக்கி, தன்னம்பிக்கையை வளர்க்க இந்நிகழ்ச்சி உதவுகிறது . இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களாகிய நீங்கள் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், உயர்ந்த பதவிகளான இந்திய குடிமைப்பணிகளுக்கு எப்படி இப்போதிலிருந்து எவ்வாறு தயார் செய்வது, தேர்வுகாலங்களில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் இங்கே நம்மிடையே இருக்கும் சாதனையாளர்களால் உங்களுக்கு தெளிவாக விளக்கப்படவுள்ளது. 

மேலும் மாணவர்களாகிய நீங்கள் வாழக்கையில் உயர்ந்த லட்சியங்களை அடைய சந்தர்பத்திற்காக காத்திராமல், உங்களுக்கான லட்சியங்களை நீங்களே வகுத்து சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்திக் கொண்டாலே போதும் சாதனைகளை நிகழ்த்தி விடலாம். இன்றைய மாணவர்களே நளைய உலகை ஆளப்போகிறவர்கள். தினமும் என்ன படிக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு காலத்தை வீணாக்காமல் அனுதினமும் படித்தாலே போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு அரசின் சார்பில் பல்வேறு கல்வி ஊக்கத் தொகைகளும், விலையில்லா லேப்டாப் களும், வழிகாட்டி புத்தக்கங்கள், பள்ளிச் சீருடைகள்  வினாவங்கிகள், மிதிவண்டிகள் இன்னும் எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 



பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியர்களுக்கென உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களையும், இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி பொதுத்தேர்வில் அதிகளவு மதிப்பெண்களை பெற்று  திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்பேசினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கடந்த பொதுத்தேர்வில்  சாதனைபடைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், உயர்கல்வி தெளிவு விளக்க புத்தகங்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் ராமசாமி, வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், அண்ணா பல்கலைகழக முதல்வர் சரவணக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.டி.பிரியங்கா, சந்தோஷ் பல்கலைகழக பேராசிரியர் ஷர்மிளாஆனந்த், அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர் கனகராஜ், மற்றும்  விடுதி மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...