மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் இடங்கள் மீட்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தை  ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது  என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தகவல்.



மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில்:-
“கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக இன்று (19.11.2016) வரை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு-66, ராமநாதபுரம், பி.ஆர் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான 45 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு-6, கவுண்டம்பாளையம், பூம்புகார் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 83.16 சென்ட் அளவிலான இடங்களும், ஸ்ரீ பூம்புகார் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.3 கோடி மதிப்பிலான 46.35 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம்,  வார்டு-7, கவுண்டம்பாளையம், ஆட்டோ நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 14 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-7, இடையர்பாளையம்,  ஸ்ரீ தேவாங்க  நகரில் சிறுவர் விளையர்ட்டு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 15 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-7, இடையர்பாளையம், தேவாங்க  நகரில் பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10.15 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு-39, பிளமேடு, பாரதி காலனியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-41, கணபதி, காந்தி மாநகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 4 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-99, குறிச்சி, பி ரூ டி காலனியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 10 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-72, நேரு மைதானம், ஆடிஸ் தெருவில்; ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும், ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.



மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...