வடகிழக்கு பருவ மழை, வரி வசூல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக வருவாய் துறை செயலாளர் கோவையில் ஆய்வு


தமிழக அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஹரிஹரனுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள இயற்கை இடர்பாடுகளுக்கான முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், நிலுவையிலுள்ள மனுக்கள், அம்மா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவ மழையினைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், மழையளவு ஆகியன குறித்து கேட்டறிந்தார். 

மேலும், வருவாய் வசூல் சட்டம், நிலவரி, நகர்ப்புற நிலவரி ஆகியவற்றின் கீழ் அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவைத்தொகைகளை விரைந்து வசூல் செய்யவும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றிதழ்கள் ஆகிய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி மற்றும் சின்னச்சாமி மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...