விசாரணைக்காக அழைத்துச் சென்ற மகனை காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தற்கொலைக்கு முயற்சி

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என கோவை வடவள்ளியை சேர்ந்த பூமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை வடவள்ளி, ராமசாமி தில்லை வீதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூமி. இவருடைய மகன் சரத் குமார். இவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரத் குமாரை வடவள்ளி காவல்துறையினர் விசாரணை என்ற பேரில் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் அழைத்துச் சென்று 7 நாட்கள் ஆகியும் மகனை காணவில்லை எனவும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தன் மகன் எங்கு உள்ளார் என கூற மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சரத்குமாரின் தந்தை பூமி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதனன்று (இன்று) உடம்பில் மண்ணென்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 



இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பூமியை மீட்டு பந்தய சாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் மகனை காணவில்லை எனக்கூறி தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...