நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தற்கொலை

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் ஆள்கடத்தல் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். செல்வகுமார் பணியன் வியாபாரம் செய்துவந்தார். தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். மேலும், சித்தாப்புதூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். 2நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், உள்ளே இருந்து துர் நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  செல்வகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் பந்தைய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பினர். தொடர்ந்த் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...