இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். 



சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:

"இந்திய உடல் உறுப்பு தான நாள்" இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முக்கியத்துவத்தை பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் முலம் ஒருவருக்கு உயிர் கொடுக்க உதவுகிறோம் .

இதை இன்றைய இளைய சமுதாயம் முதல் பொது மக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார்.



இப்பேரணியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ, முதலைமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பளர்கள் சீனிவாசன், மோகன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...