முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என அப்போலோ குழும தலைவர் தகவல்

பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...