வால்பாறை வனப்பகுதியில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை குறித்து வன அதிகாரிகள் ஆய்வு


வால்பாறைக்கு உட்பட்ட கீழ் பறனை என்னும் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் தேயிலை சேகரிக்கும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.



இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சக்திவேல் தலைமையில் வன அதிகாரி சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்துகிடந்த சிறுத்தையினை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

கீழ் பறனை பகுதியில் தற்போது சிறுத்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களிடமும், தேயிலைத் தொழிலாளர்களிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுத்தை இறந்து ஒரு வாரம் கடந்திருக்கும். கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சிறுத்தை, சுமார் 2 வயது மதிக்கத்தக்கது'' என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...