கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தலைமையில் இன்று (29.11.2016) துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில்:-  “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (29.11.2016) கோவை மாநகராட்சியும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் இணைந்து மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ முகாம் துவக்கி வைத்ததை துப்புரவு பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசி இந்த மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

இந்த மருத்துவ முகாமை கோவையிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக இணைந்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை “YI” மற்றும் “CII” மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மண்டல வாரியாக உள்ள பள்ளிகளில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தகவலை துப்புரவு பணியாளர்கள் சங்கங்கள் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து துப்பரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்ற இம்மாநகராட்சி நற்பெயர் ஏற்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர்  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், முன்னனி மருத்துவமனைகளான  பி.எஸ்.ஜி, கே.எம்.சி.எச், கே.ஜி, கங்கா, அரவிந்த் கண்மருத்துவமனை, சங்கரா கண்மருத்துவமனை, ராமகிருஷ்ணா, தைரோ கேர், ஜி.கே.என்.எம்,  ஜெம் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களான  ரத்னா ஏஜென்சீஸ், ஐடிசி  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...