கேஎம்சிஎச் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வழக்கறிஞர் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்


கோவை மாவட்டம், கணபதியைச் சேர்ந்தவர் ஆர்.மில்டன் ஆனந்த் (44). இவருக்கு எம்.ஷீபா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், மில்டன் ஆனந்த் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இரத்த அழுத்தம் காரணமாக திடீரென சுயநினைவின்றி விழுந்தார். உடனடியாக அரவது உறவினர்கள் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின், டிசம்பர் 1ம் தேதியன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக கேஎம்சிஎச் சிறப்பு மருத்துவர்களும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மில்டன் ஆனந்தின் குடும்பத்தினர் முன்வந்தனர். அதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளான கல்லீரல், கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் கேஎம்சிஎச் மருத்தவமனையில் உள்ள நோயாளிக்கு பொறுத்தப்பட்டது. தோல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள இரு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி கூறியதாவது:- 

தற்போது மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவர்கள் போன்று பலரும் தாமாக முன்வந்து உடலுறுப்புகளை தானமளித்தால் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்'' என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...