கோவையில் தடையை மீறி மது விற்பனை செய்த 15 பேர் கைது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தடையை மீறி, மது விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

டாஸ்மாக்  கடைகளிலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொள்ளும் பார் ஊழியர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதையறிந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் , தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தடையை மீறி மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 451 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் மதுவை அருந்துபவர்கள் மது போதையில் தேவையில்லாத ரகளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த மூன்று நாட்களும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...