கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதிய வடிவில் கேக்குகள் அறிமுகம்!


கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கேக் நிறுவனம் இந்த ஆண்டு புதுமையாக மனித உருவ வடிவில் கேக்குகளை செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கேக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட புதிய விதமாக கேக்குகள் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு உருவ படத்தை கேக்குகளை பொறித்தும், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை கொண்டும் தயாரித்தது.



அதேப்போல் இந்த ஆண்டு விருப்பமானவர்களின் உருவத்தை கேக் சிலையாக செய்ய துவங்கி உள்ளது. குறிப்பாக திருமண ஜோடிகள், பிரியமானவர்களின் உருவம், கிருஸ்துமஸ் தாத்தா உருவம் என தயாரித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான உருவ கேக் சிலைகளை செய்ய 5 ஆயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்டர்  கொடுத்து ஒரு வாரத்தில் விரும்பிய உருவம் கேக் சிலையாக செய்து கொடுக்கப்படும் எனவும் கேக் வடிவமைப்பாளர் சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

அதே போல் சாக்லெட், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான கேக்குகளும் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக மனித உருவ வடிவ கேக்குகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...