முன்னாள் தி.மு.க அமைச்சர் தன்னிடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக சரிதாநாயர் தகவல்


முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனிமாணிக்கம் தன்னிடமிருந்து 25 லட்சரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோவையில் சரிதாநாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி அதன் மூலமாக சரிதாநாயர் அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூபாய் 28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று சரிதா நாயர் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர், முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனி மாணிக்கம் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் குறித்து தற்போது கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற உமன்சாண்டி உள்ளிட்ட சில கேரள அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் சரிதாநாயர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...