குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தபடுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி இந்திரா நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கடலைகார சந்து 72 வார்டு இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 40கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தாங்கள்  இந்திரா நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பின் பின்புறம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சிட்டா,பீமா ரசீது,மின் இணைப்பு  என அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களாக ரயில்வே நிர்வாகம் விரிவாக்கத்திற்காக  காலி செய்ய நிர்பந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறியவர்கள் இங்கு வசிப்பவர்கள் தாங்கள் சாதாரண தினகூலி மற்றும் நடைபாதை வியாபாரிகள் எனவும் உடனடியாக காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்திப்பதால் தங்களால் மாற்று வீட்டிற்கு முன்தொகை வழங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...