நீலகிரி மாவட்டம் காவல்துறையினர் சாலை விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை விபத்து குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்களை சாலையில் வாகனத்தில் செல்லும் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் வழங்கினார். 



நீலகிரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும், மலை பாதையில் மேல் நோக்கி ஏறும் வாகனங்களுக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள் நிறுத்தி வழி விடவும், குறிப்பிட்ட வேகத்தில் செல்லவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்ட கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, திருப்பும் முன்பு சிக்னல் செய்யவும், இரவில் எதிராக வாகனங்கள் வரும் போது ஒளியை குறைக்கவும், முக்கியமாக சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்கவும், முந்தி செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும், வளைவில்  குறுகிய சாலையில் பாலங்களில் முந்த வேண்டாம், வாகனத்தை இடதுபுறமாக ஓட்டவும் எந்த நேரத்திலும் எதிரே வாகனங்கள் வரலாம், சிக்னல் விளக்குகளை மதித்து இயக்கவும் போக்குவரத்து காவல் துறை சைகைக்கு மதித்து வாகனத்தை இயங்கவும், வாகனத்தில் அனுமதித்த எடைக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம்.

நோயாளிகள் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கு உடனே வழி விடவும், மழைகாலங்களில் வேகத்தை குறைக்கவும், வாகனத்தை நிறுத்தும் முன்பு சிக்னல் செய்யவும்,  மலை பாதை வளைவில் திரும்பும்போது எதிரே ஒரு வாகனம் வருகிறது என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும், இவையெல்லாம் கடைப்பிடித்தால் எந்த ஒரு விபத்தும் இல்லாமல் அனைவரையும் பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...