மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அடையாள அட்டைகளை வழங்கினார்


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில்; “கோயம்புத்தூர் வெள்ளளுர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களை கணக்கெடுப்பு நடத்தி ஒருங்கிணைத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், உயர்ந்த மதிப்பான குப்பை பொருட்களை மட்டும் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்தும் வகையில் குறைந்த மதிப்புள்ள குப்பை பொருட்களையும் சேகரித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையிடம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

 

மேலும் அடுத்த கட்டமாக குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சியும், மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...