நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

மக்களின் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்றும் அவர் அறிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் காலக்கெடு நேற்றுடன் (டிச. 30) முடிவடைந்தது.

இந்நிலையில், நாளை முதல் (2017 ஜன. 1) ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில வங்கி பயனாளர்கள் 2500 ரூபாய் வரை ஏடிஎம் மையத்தில் நாள் ஒன்றுக்கு எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...