நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

மக்களின் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்றும் அவர் அறிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் காலக்கெடு நேற்றுடன் (டிச. 30) முடிவடைந்தது.

இந்நிலையில், நாளை முதல் (2017 ஜன. 1) ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில வங்கி பயனாளர்கள் 2500 ரூபாய் வரை ஏடிஎம் மையத்தில் நாள் ஒன்றுக்கு எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...