விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்- திட்டமிட்டு வெற்றிபெற்ற கோவை காவல் துறை


கடந்த 2015 மற்றும் 2016 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்டது போன்ற உயிரிழப்பு மற்றும் சாலை விபத்துகள் 2017 புத்தாண்டு தினத்தன்று ஏற்படக் கூடாது என திட்டமிட்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 15 நாட்களாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், நட்சத்திர ஓட்டகள் மற்றும் டாக்ஸி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கொண்டாட்டம் முடிந்து செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் செய்திகள், வானோலி மூலம் விழிப்புணர்வு, உள்ளூர் கேபிள் சேனல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



22 வாகன சோதனை மையங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்கள் ஓட்டிய 1000 பேர் காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்ட ஷாமியானா பந்தலில் அமர வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களது நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது.

12 மணிக்கு மேல் காவல்துறை சார்பாக கேக் வெட்டி கொடுக்கபட்டது. 22 வாகன பரிசோதனை மையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தனர். நா.மகாலிங்கம் மன நலம் ஆலோசனை மையம் மற்றும் யெங் இந்தியன் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தன்னார்வலர்களாகவும் பணியாற்றினர்.

கோவை டைடல் பார்க்கை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சித்தார்த் காவல்துறையின் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஈர்க்கப்பட்டு தன்னார்வலராக சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான ஏற்பாடுகளை காவல் துணை ஆணைய‌ர் லட்சுமி (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல்துறை ஆணையர் 

சரவணன் (போக்குவரத்து) ஆகியோர் மேற்கொண்டனர். இவற்றின் மூலம் 2017 ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் உயிரிழப்பு மற்றும் விபத்துகளின்றி முடிந்தது

Newsletter

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...