புலியகுளம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்ட மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புலியகுளம்  பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் நடைபாதை உள்ளிட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து புகார் கிடைத்துள்ளது.



இதனைத்தொடர்ந்து, லட்சுமி மில்ஸ் சாலை முதல் புலியகுளம் விநாயகர் கோவில் வரை உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று மாநகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களின் நடைபாதை உள்ளிட்ட இடங்களை மீட்டனர்.



மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...