சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிவரும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் மக்கள் சேவை மையம்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நீலகிரியில் அமைந்துள்ள குன்னூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகைதருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சில உடைமைகளையும் தவறவிட்டுச் செல்வது அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.



இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...