மகளை மீட்டுத் தரக்கோரி காருண்யா கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை காருண்யா நகரை அடுத்த பச்சினம்பதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பெருமாள். இவரது மகள் மனோ (20). இவர் காருண்யா கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதியன்று சுப்பிரமணிய பெருமாளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஒரு இளைஞர், நான் உனது மகளை கூட்டிச் சென்றுவிட்டதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சுப்பிரமணிய பெருமாள், காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுப்பிரமணிய பெருமாளை தொலைபேசியில் அழைத்தது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமார் மற்றும் மனோ காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் இருவரையும் தேடிவருகின்றனர்.



இதனிடையே, பெண்ணை மீட்டுத்தரக் கோரி அக்கல்லூரி முன்பு பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...