மகளை மீட்டுத் தரக்கோரி காருண்யா கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை காருண்யா நகரை அடுத்த பச்சினம்பதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பெருமாள். இவரது மகள் மனோ (20). இவர் காருண்யா கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதியன்று சுப்பிரமணிய பெருமாளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஒரு இளைஞர், நான் உனது மகளை கூட்டிச் சென்றுவிட்டதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சுப்பிரமணிய பெருமாள், காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுப்பிரமணிய பெருமாளை தொலைபேசியில் அழைத்தது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமார் மற்றும் மனோ காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் இருவரையும் தேடிவருகின்றனர்.



இதனிடையே, பெண்ணை மீட்டுத்தரக் கோரி அக்கல்லூரி முன்பு பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...