21 டேன்ஸ் ஸ்டூடியோ-வின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது


கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 21 டேன்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான நடனப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடனப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு 3-ம் ஆண்டு துவக்க விழா "சாலிடிஃபை" என்னும் தலைப்பில் வரும் பிப்ரவரி 5ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் அமைந்துள்ள கலையரங்கில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

மேலும், விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ்பெற்ற சையது சுபஹான், இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ருபர்ட், "காதல் கண்கட்டுதே" திரைப்பட நடிகை திவ்யா என்னும் அதுல்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், Mrs.  இந்தியா யெர்த் 2016 விருது பெற்றவரான ஜெயா மகேஷ் மற்றும் கேளராவில் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் ஆகியோர் கவுரவத் தலைவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 21 டேன்ஸ் ஸ்டூடியோவின் "சாலிடிஃபை" நிகழ்ச்சியில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...